தமிழகத்தில் ரூ.4000 & 14 மளிகைப் பொருட்கள் வழங்கல் – முதல்வர் துவக்கி வைப்பு!
இன்று (ஜூன் 3) கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கான 5 நலத்திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
5 நலத்திட்டங்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 வரை அமலில் உள்ளது. எனவே மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அரசு தரப்பில் ரூ.4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதன் முதல் தவணை ரூ.2000 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. அதனை பெற தவறியவர்கள் இம்மாதம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று (ஜூன் 3) கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 5 முக்கிய நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார் முதல்வர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள 2.8 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு, கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசின் முடிவு என்ன?
மேலும், கொரோனா நோய் தொற்றால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண தொகை ஆகியவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நலத்திட்டங்களையும் இன்று கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.