200 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவது எப்படி? அரசின் புதிய அறிவிப்பு!!

0
200 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவது எப்படி? அரசின் புதிய அறிவிப்பு!!

பழைய வீட்டில் இருந்து புதிய வாடகை வீட்டிற்கு மாறும் போது 200 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவது எப்படி என்பது தொடர்பான விளக்கத்தை தற்போது கர்நாடகா அரசு வெளியிட்டுள்ளது.

இலவச மின்சாரம்:

கர்நாடகா அரசு க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வீட்டுகளுக்கு 200 யூனிட் வரையிலும் இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் புதிதாக ஒரு வீட்டிற்கு செல்லும் போது க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து இலவச மின்சார வசதியை பெறுகின்றனர். அவர்கள் வீட்டை காலி செய்து வேறொரு வீட்டிற்கு செல்லும்போது புதிய வீட்டின் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து இலவச மின்சாரத்தை பெறுவதற்கு என்ன செய்வது என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

அதாவது, ஏற்கனவே பழைய வீட்டின் மின் மீட்டருடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை நீக்கி புதிய வீட்டின் மின் மீட்டருடன் ஆதார் எண்ணை இணைப்பது கடினமாக இருக்கிறது. இந்நிலையில், ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு செல்லும் போது க்ருஹ ஜோதி திட்டத்தின் இணையதள பக்கத்திற்கே சென்று ஆதார் எண்ணை நீக்கம் செய்து புதிய வீட்டின் மின் மீட்டருடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து எஸ்காம்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!