தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு அதிரடி முடிவு!

0
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரசு அதிரடி முடிவு!

தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்யும் பொருட்டு தமிழக அரசு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

தமிழக அரசின் முடிவு:

தமிழக போக்குவரத்து துறை தொழிற்சங்க ஊழியர்கள் அனைவரும் தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தான பல கட்ட பேச்சு வார்த்தைகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. ஆனால் தற்போது வரை சுமூக நிலை எட்டாத நிலையில் மீண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையின் போது போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்த கோரிக்கை குறித்தான கோரிக்கைகள் வலுவாக பேசப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு 15 வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர்கள் உள்ளிட்ட 14 பேர் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 21 ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் இதற்கான இறுதி தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!