இந்தியாவில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

0
இந்தியாவில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் 82 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருவதாகவும், ரயிலின் வேகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ரயில்வே துறை:

இந்தியாவில் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், அதிவேகத்தில் பயணிக்கும் விதமாக நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில வழித்தடங்களில் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கிலோமீட்டர் வரையிலும் அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் – விவசாயிகள் போராட்டம்!

இது மட்டுமில்லாமல் சாதாரண ரயிலின் வேகத்தையும் அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் தற்போது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும், வந்தே பாரத் ரயில்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், தானியங்கி கதவுகள், அதிவேகத்தில் பயணம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!