தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பில் வீட்டு வாடகைப்படி – அரசாணை வெளியீடு!
தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பிலும் அவர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டு வாடகைப்படி
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்திருக்கும் சூழலில் ஊரடங்கு தளர்வுகளாக அரசுத்துறைகள் அனைத்தும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
தமிழக கோவில்களில் திருக்குறள் வகுப்பு – தமிழ் வளர்ச்சித் துறை திட்டம்!
குறிப்பாக மருத்துவ காப்பீடு, வீட்டு கொடுப்பனவுகள் ஆகியவற்றில் சில திருத்தங்களை அரசு அறிவித்திருந்தது. இது தவிர கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி தொகையையும் உயர்த்தி வழங்குவதாக தகவல் அளித்துள்ளது. இதற்கிடையில் தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 12 மாதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு கடந்த 2016ம் ஆண்டு முதல் 9 மாதங்களாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஜிஜி உட்பட 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
இந்நிலையில் 12 மாத கால மகப்பேறு விடுப்பு காலத்தில் வழங்கப்படும் ஊதியத்துடன், வீட்டு வாடகைப்படி 9 மாதத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததால் குழப்பங்கள் நீடித்து வந்தது. அதனால் அரசு ஊழியர்களின் இந்த குழப்பத்தை நீக்கும் வகையில் தற்போது அடிப்படை விதிகளில் திருத்தும் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் ஊழியர்களுக்கு ஒரு வருடம் வீட்டு வாடகைப்படியை வழங்கி ஆணையிடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.