தமிழக கோவில்களில் திருக்குறள் வகுப்பு – தமிழ் வளர்ச்சித் துறை திட்டம்!
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சைவ, வைணவ கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகிய வகுப்புகளை தொடர்ந்து திருக்குறள் வகுப்பு நடத்தும் முயற்சியில் தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது.
திருக்குறள் வகுப்பு:
தற்போதைய இளைஞர்களிடம் தமிழ் மொழி மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழ் மொழியை போற்றி பாதுகாக்கவும், தமிழ் மொழியை வளர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் கோவிலில் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்ய உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பல்வேறு சைவ, வைணவ கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஜிஜி உட்பட 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
அவ்வாறு இயங்கி வரும் கோவில்களில் அறநிலையத்துறை சார்பில் அறநெறி வகுப்புகள் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகிய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனுடன் மாணவர்களுக்கு திருக்குறளையும் நடத்த தமிழ் வளர்ச்சித் துறை முயற்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் ஆர்வமுடன் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் முதலியனவற்றை கற்றுக்கொள்வது போல திருக்குறளையும் கற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
எத்தனை கோயில்களில் அறநெறி வகுப்புகள் நடத்தப்படுகின்றன; எவ்வளவு மாணவர்கள் பயன்பெறுகின்றனர்; திருக்குறள் வகுப்புகளை நடத்த தேவையான கூடுதல் நேரம் மற்றும் தேவைப்படும் ஆசிரியர்கள் பற்றிய அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் கேட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முழுமையான தகவல்கள் கிடைத்ததும், ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர்களுக்கான ஊதியத்தை அறநிலையத் துறை வழங்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.