தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஜிஜி உட்பட 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று த8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 4 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், அதில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், கொரோனா நிவாரணம் என பல நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்துள்ளது. மேலும் இந்த 4 மாதங்களில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் செப்.27 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
அது மட்டுமில்லாமல் பழைய ஆளுநர் மாற்றப்பட்டு புதிய ஆளுநராக ஆர்.என் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகர காவல் ஆணையராக ஜி.கார்த்திகேயனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேந்திர குமார், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஜிஜி யாக நியமனம் செய்துள்ளார்.
தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்!
மேலும் ஜெயந்த் முரளி, அபய்குமார் சிங், நிஷா உள்ளிட்ட 10 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை ஏடிஜிபி.,யாக இருந்து வந்த ஜெயந்த் முரளி, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி யாக இருந்த அபய்குமார் சிங், ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக ஐபிஎஸ் அதிகாரி நிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.