ஜூலை 18 முதல் ஹோட்டல் அறைகளுக்கான கட்டண உயர்வு – சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு!

0
ஜூலை 18 முதல் ஹோட்டல் அறைகளுக்கான கட்டண உயர்வு - சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு!
ஜூலை 18 முதல் ஹோட்டல் அறைகளுக்கான கட்டண உயர்வு - சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு!
ஜூலை 18 முதல் ஹோட்டல் அறைகளுக்கான கட்டண உயர்வு – சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு!

சமீபத்தில் ஹோட்டல் அறைகளுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மத்திய அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு பட்ஜெட்டில் விடுமுறைக்கு வருபவர்களை பாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி உயர்வு

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற 47 வது GST கவுன்சில் கூட்டத்தில் பேனா மை துவக்கி LED விளக்குகள் வரையுள்ள பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி உயர்த்தப்பட்டது. அந்த வகையில் ஒரு நாளைக்கு ரூ.1000 க்கு கீழ் இருக்கும் ஹோட்டல் அறைகளுக்கான வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக கடந்த ஜூன் 29 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, ‘ஒரு நாளைக்கு ரூ.1000 வரையிலான கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு 12% வரி விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இது தொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

Exams Daily Mobile App Download

இதற்கு முன்னதாக, ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஹோட்டல் அறைகளுக்கு உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியானது ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து வரி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை தலைவர் பூனம் ஹர்ஜானி கூறுகையில், ‘இதுவரை, ஒரு ஹோட்டல், விடுதி, விருந்தினர் மாளிகை, கிளப் அல்லது கேம்ப்சைட் குடியிருப்பு அல்லது தங்கும் அறைகளுக்கான சேவைகள் ஒரு நாளைக்கு ரூ. 1000 அல்லது அதற்கு சமமான தொகைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – அகவிலைப்படி சம்பளம் || 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

ஜிஎஸ்டி கவுன்சில் இப்போது அந்த விலக்கை திரும்பப் பெற்று, 12% ஜிஎஸ்டி விகிதத்தை கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க பரிந்துரைத்துள்ளது. இந்த 12 சதவீத ஜிஎஸ்டி க்கு வரி குறைந்த கட்டணங்களை கொண்ட ஹோட்டல் நிர்வாகங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்’ என்று கூறியுள்ளார். இப்போது ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்புக்கு முன், ஒரு அறைக்கு மொத்தத் தொகையாக ரூ.1,800 செலுத்த வேண்டியிருந்தது. இதை தொடர்ந்து ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் வகையில் 12% விகிதத்தில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் ரூ.1800 கட்டணத்துடன் சேர்த்து ரூ.216 கூடுதலாக செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!