தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 17 வரை விடுமுறை!
தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 16ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வரவுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடுமுறை:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 3ம் திருப்புதல் தேர்வு துவக்கம்!
மேலும் செய்முறை தேர்வு வரும் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கவுள்ளது. தற்போது தேர்வுகள் நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்களுக்கு பாடங்கள் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 15ம் தேதி புனித வெள்ளி, ஆகிய இரண்டு நாட்களும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல வார விடுமுறை இடையில் சனிக்கிழமை வேலை நாளாகவும், பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இந்த நிலையில் இடையில் உள்ள சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 16 ஆம் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 14 முதல் 17 வரை பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. அதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வரும் 18 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.