தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 3ம் திருப்புதல் தேர்வு துவக்கம்!

0
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - 3ம் திருப்புதல் தேர்வு துவக்கம்!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - 3ம் திருப்புதல் தேர்வு துவக்கம்!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 3ம் திருப்புதல் தேர்வு துவக்கம்!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் நடத்த பள்ளிக் கல்வித்துறை கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இந்த பொதுத்தேர்வுக்கு மாணவர்களை நன்றாக தயார்படுத்த, இதுவரை இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மூன்றாம் திருப்புதல் தேர்வு நேற்று தொடங்கி உள்ளது.

3ம் திருப்புதல் தேர்வு துவக்கம்:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதலுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. கொரோனா பெருந்தொற்றால், 2019- – 20 ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தது. 10ம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இன்றி, ‘ஆல் பாஸ்’ என அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த 2020- 21ம் கல்வி ஆண்டில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக, பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும், தேர்வுகள் இன்றி ஆல் பாஸ் என தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் பாடங்களை விரைவாக நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

இந்நிலையில் நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வு மே மாதம் துவங்குகிறது. கொரோனா தாக்கத்தால் நீண்ட நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யவும், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக, குறைக்கப்பட்ட பாடங்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி வினாத்தாள் தயாரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டங்களில் பாடத்திட்டம் முடிக்காத காரணத்தால், மீதமுள்ள பாடப்பகுதிகளுக்கான, மூன்றாம் கட்ட திருப்புதல் தேர்வை பள்ளிகள் அளவிலேயே நடத்திக்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆட்சியர் முக்கிய உத்தரவு!

இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில், 3ம் கட்ட தேர்வு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நேற்று துவங்கியது. காலை,10 மணி முதல் மதியம் 1 மணி, மதியம் 2 முதல் மாலை 5 மணி என ஏப்.23ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான, வினாத்தாள் மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ‘மெயில்’ மூலம் அனுப்பப்படுகிறது. பின் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏப்ரல் 25 முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்.14 (இன்று), 15 புனித வெள்ளி என, இரு நாட்களுடன், தொடர் விடுமுறை காரணமாக சனிக்கிழமை 16ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் வரும் 18ம் தேதி செயல்படத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!