டெல்லியை தொடர்ந்து இந்த மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை? திணறடிக்கும் காற்று மாசு விவகாரம்!
நாட்டின் 3 மாநிலங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால், மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் குறைந்து வருவது சமீப காலமாக அதிக கவனத்தை பெற்று வருகிறது. காற்றின் தரமானது உயிரினங்கள் சுவாசிக்க வேண்டிய அளவிலான தரத்தில் இல்லாமல் இருப்பது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் குழுவும் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் மேலும், காற்று மாசுபடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் AQI 406 என்ற மிக கடுமையான நிலையை எட்டியுள்ளது. இதனால் டெல்லியில் நவம்பர் 5ம் தேதியான நாளை முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மூடப்படும் என்றும், மேலும், 5ம் வகுப்பிற்கு மேலான மாணவர்களுக்கு வகுப்பறையை விட்டு வெளியில் நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், டெல்லியை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் கௌதம் புத்த நகரில் 8 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பெரும்பாலும், நேரடி வகுப்புகளை தவிர்த்து விட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் மாவட்ட ஆய்வாளர் தெரிவித்துள்ளார். மேலும், ஹரியானா மாநிலத்தில் குர்கான் மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் காற்றின் தரம் மோசமாக உள்ளதால் பள்ளிகளை மூடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.