தமிழகத்தில் நவ.05 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!
திருச்சி மாவட்டத்தில் வரும் நவ.05 ம் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அதிக அளவு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கூட பிரபல நிறுவனமான டாடா எலக்ரானிக்ஸ் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அனைத்து தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க வரும் நாளை திருச்சி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க கூடிய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருடன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை: தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!
Follow our Instagram for more Latest Updates
அதன் பிறகு பேசிய அமைச்சர் இந்த முகாம் வாயிலாக சுமார் 5000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.