பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – அரசின் திடீர் அறிவிப்பு!
மாநிலத்தில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருவதால் வரும் ஜூலை 17 ஆம் தேதி வரைக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அதிக கனமழை பெய்து வருகிறது. மேலும், அம்மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து மிக அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும், தெலுங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காளேஸ்வரத்தில் அதிக அளவில் மழையின் அளவு பதிவாகியுள்ளது. மேலும், தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமல்லாமல் குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழைப்பொழிவு இருந்து வருகிறது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை அறிக்கை வெளியீடு!
இதனையடுத்து, கனமழையின் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கடந்த ஜூலை 11 முதல் ஜூலை 13 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தெலுங்கானா மாநிலத்தில் தற்போது வரைக்குமே கனமழை நீடித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நாட்களுக்கும் தெலுங்கானா மாநிலத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால், இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் வரும் ஜூலை 17 ஆம் தேதி வரைக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கலாம் என தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விடுமுறை முடிந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் பார்வையிடவுள்ளார்.