தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை அறிக்கை வெளியீடு!
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் அரவிந்த் செல்வராஜ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனை அறிக்கை :
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று கடந்த 12ம் தேதி உறுதி செய்யப்பட்டதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் , நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக சென்றார்.
கோபி செய்த காரியத்தை நினைத்து அசிங்கப்படும் இனியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவிரி மருத்துவமனை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று சென்னை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’, என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினை அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இந்நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.