பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – அரசு திடீர் அறிவிப்பு!
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான கனமழை பெய்து வருகிறது. இதனிடையே நாளையும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
பள்ளி விடுமுறை:
தற்போது இந்தியா முழுக்கவே பருவமழை காலம் என்பதால் பல மாநிலங்களில் அதிக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கூடுதல் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதி முழுக்கவே மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
Accenture சென்னை வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !
அதிலும் தெலுங்கானா மாவட்டத்திலேயே பூபாலப்பள்ளி மாவட்டத்தில் தான் அதிக அளவில் மழைப்பொழிவின் அளவு பதிவாகி உள்ளது. மேலும், தெலுங்கானா மாநிலத்தை தொடர்ந்து கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் அதிக அளவில் மழை பொழிவு இருந்து வருகிறது. மேலும் தமிழகத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 11ஆம் தேதி முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இன்னும் 2 நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி வரைக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அரசு அறிவித்திருந்த விடுமுறை நாட்கள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மழையின் அளவு குறைவதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தெலுங்கானா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.