தமிழகத்தில் நாளை (மே 14) அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை – உயர் கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் டான்செட் தேர்வுகள் நாளை (மே 14) நடைபெறுவதை அடுத்து, அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
டான்செட் தேர்வு
அரசிற்கு உட்பட்ட பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க டான்செட் (TANCET) எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர் சேர்க்கை வழங்கப்படும். 2022-23 ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வை ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன் படி டான்செட் தேர்வு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் நாளை (மே 14) அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான டான்செட் தேர்வு நாளை நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் மட்டும் கோடை விடுமுறை – கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!
அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டான்செட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/