பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் மட்டும் கோடை விடுமுறை – கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!
டெல்லி அரசுப் பள்ளிகளில் கோடை விடுமுறைகள் வழக்கமாக மே10 ஆம் தேதி தொடங்கும், ஆனால் இந்த முறை பள்ளிகள் தாமதமாக தொடங்கப்பட்டதால், 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் 15 நாட்கள் மட்டும் என கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதையடுத்து நர்சரி முதல் 2ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே கோடை விடுமுறையை முழுமையாகப் பெற முடியும் என குறிப்பிட்டு உள்ளது.
கோடை விடுமுறை:
நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. இந்த வகையில் ஒரு சில மாநிலங்களில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் செயல்படும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து ஆண்டு இறுதித்தேர்வுகள் நிறைவடைந்து கோடை விடுமுறையும் விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டெல்லி மாநில ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கோடை விடுமுறைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு டெல்லி அரசுப், பள்ளிகளில் இரண்டு மாதங்களுக்குப் பதிலாக 15 நாட்கள் மட்டுமே விடுமுறை என அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மே 11, 2022 முதல் ஜூன் 28, 2022 வரை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த முடிவை அதிகாரிகள் மாற்றியுள்ளனர். அதாவது 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, கோடை விடுமுறை ஜூன் 15 முதல் ஜூன் 30 வரை, அதாவது 15 நாட்கள் மட்டுமே என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், கல்வித்துறையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது. இந்த இடைவெளியை போக்க, அரசு பள்ளிகளில், 35 நாட்கள் கூடுதல் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நர்சரி முதல் 2ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை முழுமையாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.