ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு!

0
ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு!
ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு!
ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு!

தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் பள்ளிகள் அனைத்தும் ஜூலை 1 முதல் மீண்டுமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் திறப்பு

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து என்சிஆர் பகுதியில் உள்ள பள்ளிகள் ஜூலை 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் பள்ளி மாணவர்களின் பெற்றோரது கவலையை அதிகரித்துள்ளது. மறுபுறம், நேரடி வகுப்புகளில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று பள்ளிகளின் முதல்வர்கள் கருதுகிறார்கள்.

நாளை (ஜூன் 25) முதல் ஜூலை 25 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு திடீர் உத்தரவு!

இது குறித்த டெல்லியில் உள்ள பள்ளி முதல்வர்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் புதிய ஆபத்துகளை உருவாக்கினாலும், தொற்றுநோயுடன் வாழ பழக வேண்டும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். டெல்லியில் நோய்த்தொற்று மீண்டும் பரவுவது கவலைக்குரிய விஷயம் தான். ஆனால் இப்போது வகுப்புகளை ஒத்திவைக்க முடியாது. அதற்கு மாற்றாக தொற்று நோய் பரவாமல் இருக்க பள்ளிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருகை தராமல் வீட்டிலேயே இருக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பள்ளி ஆசிரியர்களை தொடர்புகொள்வதன் மூலம் அனுமதி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் கடந்த ஒரு நாளில் மட்டும் 1060 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சம் என்றும் நேர்மறை வழக்குகள் சுமார் 10.09 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!