தமிழகத்தில் மார்ச் 15ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டமானது மார்ச் 15ம் தேதி அன்று நடக்க இருப்பதால் அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தேர் 36 அடி உயரத்தில் 5 அடுக்கு கட்டுமானங்களை கொண்ட தேர் பீடத்தில், 60 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 450 டன் எடையில் தேர் சுற்றி வரும். உலகப்புகழ் பெற்ற இந்த தேரோராட்டத்தை காண உலகம் முழுவதும் இருந்து பலரும் கூட்டம் கூடி வருவார்கள். இதற்கான கட்டுமான பணிகள் கடந்த மாதம் நடைபெற்று வந்தது.
தமிழகம் முழுவதும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – முழு விபரம் இதோ!
நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. ஆண்டுதோறும் தேரோட்டத்தன்று மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – பயன்கள், சலுகைகள் & சிறப்பம்சங்கள்! முழு விவரம் இதோ!
நடப்பு ஆண்டிற்கான ஆழித்தேரோட்டம் மார்ச் 15ம் தேதி அன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க முன்னதாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மார்ச் 15ம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.