பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 24-ஆம் தேதி வரை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலால் வரும் ஜூலை 24ஆம் தேதி வரைக்கும் பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மணிப்பூர் மாநிலத்தில் நேற்று தான் கோடை விடுமுறை முடிந்து வகுப்புகள் துவங்க இருந்த நிலையில் மறுபடியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
இந்தியா முழுவதுமே மீண்டும் கொரோனா நான்காம் அலையின் பரவல் அதிகரிக்க துவங்கிவிட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து பொதுமக்களையும் இரண்டு கொரோனா தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளும்படி அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும், இரண்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களையும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு – அமைச்சர் பேட்டி!
இது மட்டுமல்லாமல் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், முடிந்தவரைக்கும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பொது இடங்களில் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவுதலின் வீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால், தினமும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பரவலின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுவரைக்கும் மணிப்பூர் மாநிலத்தில் 15% பொதுமக்கள் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், மணிப்பூர் மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஜூன் 16ம் தேதிதான் பள்ளிகள் துவங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால் வரும் ஜூலை 24ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.