இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 1ம் தேதி லோக்சபா தேர்தலை முன்னிட்டு விடுமுறை என கவர்னர் அறிவித்துள்ளார்.
விடுமுறை அறிவிப்பு:
இமாச்சல பிரதேசத்தில் வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கார்ப்பரேஷன்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக ஜூன் 1 ஆம் தேதி விடுமுறை என ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாம்பன் பாலம் 3 மாதங்களுக்கு மூடல் – வெளியான அறிவிப்பு!
அது மட்டுமில்லாமல் இமாச்சலத்தின் உனா, காங்ரா, சம்பா மற்றும் சோலன் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் பஞ்சாப் வாக்காளர்களுக்கும் சிறப்பு ஊதிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கவர்னர் வெளியிட்ட அறிவிப்பில் தினக்கூலி ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.