தமிழகத்தின் அடையாளமான பாம்பன் பாலம் கட்டுமான பணி காரணமாக 3 மாதங்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம்
தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கட்டுமானப் பணி நடைபெற இருக்கிறது. அதனால் பழைய தூக்கு பாலம் திறக்கப்படாது. அடுத்த 3 மாதங்களுக்கு பின் ஜூனில் சோதனை ஓட்டத்தின் போது புதிய தூக்கு பாலம் திறக்கப்பட இருக்கிறது. மேலும் தற்போது பாம்பன் கடலில் ரூ. 535 கோடியில் 2 கி.மீ. ல் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் 1.5 கி.மீ.க்கு கட்டுமான பணி நுாறு சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 500 மீ. ல் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!
தற்போது பாம்பன் கடற்கரையில் 700 டன் எடையுள்ள துாக்கு பாலம் வடிவமைக்கும் பணி முடிந்து மார்ச் 12 முதல் நிலுவையில் உள்ள 500 மீ. துாரம் பாலம் வழியாக துாக்கு பாலத்தை ரயில்வே ஒப்பந்த பொறியாளர்கள் எடுத்து செல்கின்றனர். இந்த மாதம் இறுதியில் தூக்கு பாலத்தை புதிய பாலத்தில் பொருத்த உள்ளதால், இரு பாலம் நடுவில் உள்ள கடலில் தற்காலிக துாண்கள் அமைக்க இருக்கிறது.