10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நிதிமன்றத்தில் கையெழுத்து தட்டச்சர் நிலை-III , தட்டச்சர் மற்றும் Steno-Typist போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதனை நிரப்புவதற்காக அரசு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசு பணியிடங்களை நிரப்ப இயலாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அரசு பல்வேறு அரசு காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது. மேலும் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் தற்போது அதிக காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.
காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – உடற்தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியீடு!
இதில் கையெழுத்து தட்டச்சர் நிலை-III, தட்டச்சர் மற்றும் Steno-Typist போன்ற பணியிடங்களில் 11 இடங்கள் காலியாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது அரசு வேலைக்காக காத்திருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தினருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதற்கு விண்ணப்பிக்க districts.ecourts.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். இப்பணியிடத்திற்கான விண்ணப்பித்தை வருகிற டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடல்? கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி!
இப்பணியிடத்தில் சேர விரும்புவர்கள் 01.07.2021 இன் படி குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மேலும் அதிகபட்சம் 32- வயதுக்குள் இருத்தல் வேண்டும். அத்துடன் SC/ST பிரிவினருக்கு எந்தவித வயது வரம்பு கிடையாது. அத்துடன் விண்ணப்பதார் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பணிபுரிவர்களுக்கு ரூ.19,500 முதல் அதிகபட்சம் 65,500 வரை சம்பளமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் பூர்த்தி செய்ய The Principal District Judge, Perambalur District Court, Thuraimangalam, Perambalur-621212 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம்.