மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடல்? கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி!
பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பட்டால் அரசு பள்ளிகளை மூடுவதற்கும், தேர்வுகளை நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்:
கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் தீவிர கட்டுப்பாடுகள் நோய் தடுப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது சமீப நாட்களாக மீண்டும் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஹூப்பள்ளி-தார்வாட்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், பெங்களூரு கிராமப்புறம், மைசூர் மற்றும் சிக்கமகளூருவில் உள்ள பள்ளிகளின் மாணவர்களிடையே தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – ‘Waveform’ வாய்ஸ் மெசேஜ்கள் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே!
பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், சூழ்நிலை ஏற்பட்டால் தேர்வுகள் மற்றும் பள்ளிகளை நிறுத்துவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ் அறிவித்துள்ளார். இருப்பினும், தற்போது வழக்கமான நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் கூறினார். COVID-19 நிலைமையை அரசு ஒவ்வொரு மணி நேரமும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். இது குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
வாரத்தில் 4.5 நாட்கள் மட்டுமே வேலை – ஜன.1 முதல் அமல்! ஊழியர்கள் மகிழ்ச்சி!
ஒரு வருட லாக்டவுனுக்குப் பிறகு மீண்டும் தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டால், குழந்தைகளை மீண்டும் வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது கடினம். இருப்பினும், குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் கல்வித் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார். மேலும், பள்ளிகளில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் பெற்றோர்கள் கவலை அடைய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.