காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – உடற்தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியீடு!
புதுச்சேரியில் காவல்துறை பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 2022ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் வாரத்தில் உடல்தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது என்று டிஐஜி மிலிந்த் டும்ப்ரே தெரிவித்துள்ளார்.
உடல் தகுதித்தேர்வு:
புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் புதுச்சேரியில் காவல்துறை பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட உடல் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு புதுச்சேரி காவல்துறையில் உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னிசிஷியன், 20 டெக் ஹேண்ட்லர் ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்காக மொத்தம் 17,225 மொத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் படி முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடல்? கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி!
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் எடுத்ததால் அடுத்தக்கட்ட தேர்வு நடத்த முடியாமல் போனது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 3வது வாரத்தில் உடல் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. உடல் தகுதித் தேர்வு மின்னணு சாதன பட்டை அணிவித்து கணினி மூலம் கண்காணிக்கப்படும் என்று டிஐஜி மிலிந்த் டும்ப்ரே தெரிவித்துள்ளார்.
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – ‘Waveform’ வாய்ஸ் மெசேஜ்கள் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே!
மேலும் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 2,459 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக உள்ளது என்று கூறியுள்ளார். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் அதன்படி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ஆள்சேர்ப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் வரும் 16 ஆம் தேதி வரை மனு அளிக்கலாம். மனுக்கள் குறைதீர்ப்பு கமிட்டியால் ஆலோசனை செய்யப்பட்டு தகுந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.