வேகமெடுக்கும் கொரோனா தொற்று, மீண்டும் ஊரடங்கு அமல் – அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புகள்:
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கி விட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளது. அதனை தொடர்ந்து யூனியன் பிரதேசமான புதுவையிலும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நாள் ஒன்றுக்கு 1500 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பிப்.15 வரை வீட்டில் இருந்தே வேலை நீட்டிப்பு!
கடந்த ஜனவரி மாத நிலவரப்படி 31,776 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 50 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த புதுவை அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குக் வித் கோமாளி சீசன் 3 ல் ‘புஷ்பா’ வாக களம் இறங்கிய பாலா – கலகலப்பான ப்ரோமோ!
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக சற்று கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியது. இருப்பினும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். புதுவையில் காரைக்கால், மாகி ஏனாம் பகுதியில் மேலும் 876 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,62, 633 ஆக உயர்ந்துள்ளது.