மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள அதிகரிப்பு – யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள அதிகரிப்பு - யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள அதிகரிப்பு - யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள அதிகரிப்பு – யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!

தற்போது 7வது ஊதியக் குழுவின் ஊழியர்களைப் போலவே, 5வது மற்றும் 6வது ஊதியக் குழுவின் ஊழியர்களும் ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வின் பலனைப் பெற உள்ளனர். அதன்படி ஜனவரி முதல் DAவை நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட இருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DA உயர்வு

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி (DA) 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படியை பெற உள்ளனர். இருப்பினும், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் குழு ஆகியவற்றின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் இந்த பலன் கிடைக்கவில்லை. இந்த ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு தயாராகி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் 5வது மற்றும் 6வது ஊதியக் குழுவின் கீழ் வரும் ஊழியர்களின் அகவிலைப்படி 13 சதவீதம் அதிகரிக்கலாம் என நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை தெரிவித்துள்ளது. ஐந்தாவது ஊதியக் குழுவின் கீழ் வரும் ஊழியர்களுக்கு தற்போது 368 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அதை 13 சதவீதம் அதிகரித்து 381 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் வரும் ஊழியர்களின் டிஏ 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாக உயர்த்தப்படலாம். அந்த வகையில் அவர்களின் டிஏ 7 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

இப்போது, 7-வது ஊதியக் குழுவின் ஊழியர்களைப் போலவே 5 மற்றும் 6-வது ஊதியக் குழுவின் ஊழியர்களும் ஜனவரி 2022 முதல் அகவிலைப்படியின் பலனைப் பெறுவார்கள். ஜனவரி முதல் அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படியை நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நடந்தால், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் வரும் ஊழியர்களும் கடந்த மூன்று மாத நிலுவைத் தொகையை அதாவது ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாத நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் பெறலாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை!

மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இன்னும் 7வது ஊதியக் குழுவின் வரம்புக்குள் வரவில்லை. அத்தகைய ஊழியர்களின் சம்பளம் மற்றும் கூடுதல் படிகள் தற்போது ஐந்தாவது அல்லது ஆறாவது ஊதியக் குழுவின் படி தீர்மானிக்கப்படுகின்றன. இதனால் தான் 7வது ஊதியக் குழுவிற்கான அகவிலைப்படியை உயர்த்திய பிறகும் இந்த ஊழியர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இப்போது ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் கமிஷன்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் மூலம், ஆயிரக்கணக்கான ஊழியர்களும் உயர்த்தப்பட்ட சம்பளத்தின் பலனைப் பெற முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!