தமிழகத்தில் நாளை (ஆக. 24) ‘இந்த’ ஏரியாக்களில் மின்தடை – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
மின்தடை:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மின் தேவை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு காரணம் மக்கள் தொகை அதிகரித்து வருவதே என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படவில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது. நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்து விட்டதால் மின் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாற்று வழியில் மின் உற்பத்தி செய்வதில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மின்தடை செய்யப்படுகிறது. மேலும் மின் கம்பிகள் மாற்றுதல், மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் போன்றவைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் மின்சாரம் தடையில்லாமல் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மயூவை அழைத்து செல்லும் ராஜேஷ், ராதிகாவுக்கு ஆதரவாக கோபி – புதிய அதிரடி திருப்பங்கள்!
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைச்சேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர் , நல்ல மங்கலம் ஆகிய இடங்களில் நாளை( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்