தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கடலோரப் பகுதியில் காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுளள்து.

கனமழை:

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மிதமான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தை பொறுத்த வரைக்கும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக அதிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதே போல நாளையும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான, மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான, மிதமான மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ரேஷன் பொருட்கள் இனி கிடையாது – வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரிக் கடல் பகுதி, தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையில் காற்று வீசும் எனவும் இடையிலேயே 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!