தமிழகத்தின் 33 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – திசை மாறும் ‘அசானி’ புயல்!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள அசானி புயல், இன்று கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று “அசானி புயல்” உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கித் திரும்பும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசா மற்றும் ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர்,பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி, கரூர் ,சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ,திருப்பூர் ,தேனி,மதுரை, சிவகங்கை, விருதுநகரில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் – 8.83 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மந்தவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. மேலும் வங்கப் பெருங்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.