தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை அறிவிப்பு
தமிழகத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று (ஜூலை 6) கனமழை பெய்திருந்த நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை துவங்கிய ஆரம்பத்திலேயே கேரளா, மஹாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருந்தது. இந்த வரிசையில் தமிழகத்திலும் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வு குறித்த அறிக்கை வெளியீடு!
அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (ஜூலை 6) மிதமான மழை காணப்பட்டது. அதே போல சென்னையின் புறநகர் பகுதிகளிலும், திருக்கோவிலூர், அரக்கோணம், திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் அரசூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததால் மானாவாரி பயிர் செய்த விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.