TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேர்வு குறித்த அறிக்கை வெளியீடு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்நிலையில் தமிழகத்தில் அரசுப்பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு:
இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன் படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 11 எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன. மேலும் கணினி வழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
LPG சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் இத்தேர்வுக்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10,371 ஆசிரியர், பேராசிரியர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர், பேராசிரியர் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வரும் டிசம்பரில் தேர்வு நடத்தப்படும்.
Exams Daily Mobile App Download
அதன்படி தற்போது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள் – 1க்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.