தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை வெளுத்துவாங்கும் – பொதுமக்களே உஷார்!
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணத்தினால் நகரின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக தொண்டியில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது. மேலும், வங்கு கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியினால் ஜூலை 27ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
இனி ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே Whatsapp வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் – சூப்பர் அப்டேட்!
மேலும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தென் தமிழக கடலோரப் பகுதி, மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதி, வடக்கு ஆந்திரா ஒரிசா கடலோர பகுதி, தெற்கு இலங்கை கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.