தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – ஜூலை 24 ஆம் தேதி வெளியீடு!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி துணைத் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி துணைத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934 பேருக்கு நடத்தப்பட்டது. அவர்கள் இதே கல்வியாண்டில் மேற்படிப்பை தொடங்க வேண்டும் என்ற நோக்கில் ஜூன் மாதமே தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை வெளுத்துவாங்கும் – பொதுமக்களே உஷார்!
அதன் படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 24 ஆம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகளை தெரிந்து கொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண், பிறந்ததேதி பதிவுசெய்து முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.