மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு! ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
உதவித்தொகை:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அவர்களுக்கு உரிய முறையில் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நலத்துறையால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
நடப்பு கல்வியாண்டுக்கான உதவித்தொகை பெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – ஜூலை 24 ஆம் தேதி வெளியீடு!
இதனை பெற தகுதியும், விருப்பமும் உடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் இ- சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.