2022-23 ஆம் நிதியாண்டில் சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 48,028 கோடி வசூல் – வெளியான தகவல்!
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலமாக 2022-23 ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.48,028 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
சுங்கச்சாவடி வசூல்
இந்தியாவில் மொத்தம் 460 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய அமைக்கப்பட்டு சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பிற்காக வரி வசூல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் மூலமாக மத்திய அரசு வருவாய் ஈட்டி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் மத்திய அரசு ஈட்டிய வருவாய் தொடர்பாக லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.
மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு! ஆட்சியர் அறிவிப்பு!
அதன் படி மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதன் படி கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ. 27,923 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ. 33,907 கோடியும் சுங்கச்சாவடிகள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அதே போல 2022-23 ஆம் நிதியாண்டில் ரூ. 48,028 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.