தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!!
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் எனவும், 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை:
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கான புத்தாண்டு பரிசு – 4% அகவிலைப்படி உயர்வு!!
மேலும், மதுரை வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும், வைகை பாலத்தின் அருகே யாரும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.