மத்திய அரசின் PM Kisan திட்டத்தில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதா? கண்டுபிடிப்பது எப்படி?
மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.2000 வீதம் என ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. இதில் தற்போது 11வது தவணை தொகை விரைவில் வழங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து உங்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
பயனாளிகள் கவனத்திற்கு
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிஎம் கிசான் திட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணை வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 11 தவணை தொகைக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் தங்களின் e-Kyc விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு வருகிற மே 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 11 தவணை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது உங்கள் கணக்கில் 11 தவணை டெபாசிட் செய்யப்பட்டு விட்டதா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
வழிமுறைகள்:
1. இதற்கு முதலில் https://fw.pmkisan.gov.in/
2. இப்போது திரையில் ஆதார் எண், மொபைல் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும்.
3. இதனை சரியாக நிரப்ப வேண்டும். இதையடுத்து ஆதார், மொபைல், கணக்கு எண் உள்ளிட்ட தகவல்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
4. இறுதியாக உங்கள் கணக்கில் பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுள்ளீர்களா என்பதை தெளிவாக பார்க்க முடியும்.