கோபியும் நம்மை ஏமாற்றி விட்டாரா? கதறும் ராதிகா! புதிய திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!
பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பது தெரியாமலே ராதிகா இத்தனை நாட்களாக பாக்கியாவிடம் பழகி கொண்டிருக்கிறார். இந்நிலையில், பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பதை அறிந்து கொண்டு கோபி நம்மை ஏமாற்றிவிட்டார் என கதறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தன்னை வீட்டில் யாருமே கவனிப்பதில்லை, காசுக்காக மட்டுமே என்னை குடும்பத்தினர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள் என சொல்லி தான் ராதிகாவை கோபி காதலிக்க வைத்தார். தற்போது கோபி ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ராதிகா பிறந்தநாள் விழாவிற்கு வந்துவிட்டு சென்ற பிறகு எந்த பிரச்சனையும் இல்லை என கோபி நினைக்கிறார். கோபி நினைத்தது போல பிறந்தநாள் விழா முடிந்ததும் ராதிகா கிளம்பி விடுகிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகா வீட்டை விட்டு கிளம்பியதுமே கோபி ராதிகாவை சந்திக்க செல்கிறார். ராதிகாவுடன் கோபி நெருக்கமாக நின்று பேசி கொண்டிருப்பதை மூர்த்தி பார்த்து திகைத்து போகிறார். எது உண்மை என்பது தெரியாமல் தானாகவே யாரையும் தவறாக நினைத்துவிட கூடாது என்பதற்காக மூர்த்தியும், தனமும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்கள். உங்களது வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என ராதிகாவிடம் மூர்த்தி கேட்கிறார். ராதிகாவும், கோபியின் புகைப்படத்தை எடுத்து மூர்த்தியிடம் நீட்டுகிறார். அந்த புகைப்படத்தை பார்த்ததும் மூர்த்தியும், தனமும் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடும் ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்!
கோபியிடம் சென்று ஏன் பாக்கியா அக்காவின் வாழ்க்கையை கெடுக்கிறீர்கள் என கூறுகிறார். கோபிக்கு கோவம் வந்து மூர்த்தியை நன்றாக திட்டு விடுகிறார். கோபி திருந்தவே மாட்டார் என நினைத்து ராதிகாவிடம் சென்று மூர்த்தி, பாக்கியா தான் கோபியின் மனைவி என அனைத்து உண்மைகளையும் கூறும்படியும், மறுபடியும் ஒருவரிடம் ஏமாந்து விட்டோம் என ராதிகா மயூவிடம் சொல்லி அழுகும்படியும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.