தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடும் ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்!
ராஜா ராணி சீசன் 2 தொடரில் சந்தியாவின் அண்ணியாக நிஹாரிகா நடித்து வருகிறார். தனது கணவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ராஜா ராணி சீசன் 2
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ராஜா ராணி சீரியலில் பிரசவத்தின் காரணமாக ஆலியா விலகினார். பிரசவம் முடிந்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியலில் இணைந்து கொள்வேன் என கூறியிருந்தார். ஆனால், தற்போது குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடிகை ரியா தான் இனிமேல் சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும், ராஜா ராணி சீசன் 2 தொடரில் இணைய வாய்ப்பில்லை எனவும் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
குடும்பத்தினரின் முன்னிலையில் உண்மையை கூறிவிடும் மூர்த்தி – கோபியை திட்டி தீர்த்த பாக்கியா!
ஆலியா விலகியதுமே சீரியல் சற்று சரிவடைந்த நிலையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், தற்போது நடிகை ரியாவை ரசிகர்கள் சந்தியா கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொண்டனர். முதலில் பார்வதியின் திருமணம் நடைபெறுமா அல்லது விக்கி கடைசி நேரத்தில் பிரச்சனை செய்து திருமணத்தை நிறுத்தி விடுவாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. தற்போது பார்வதியை கடத்தி வைத்திருப்பது யார் என விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் சந்தியாவின் அண்ணியாக நிஹாரிகா ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இவர் அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் டான்ஸ் ஆடிய வீடியோ என பல வீடியோக்களை பதிவிட்டபடி இருப்பார். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலமாகி வருகிறது. அதாவது தனது கணவரின் பிறந்தநாளன்று தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதையும் பதிவு செய்துள்ளார். மேலும், ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தினை பார்த்து இவருக்கு திருமணமாகிவிட்டதா என அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது திருமண தினத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.