தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரே மாதிரி அமைப்பில் கடைகள்!
தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் ரேஷன் கடைகளை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
புதிய ரேஷன் கடைகள்
தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இப்போது தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் விதம் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசப்படுகிறது. அதாவது, பல மாவட்டங்களில் இன்னும் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
தவிர இந்த கடைகள் இருக்கும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதில்லை. மறுபக்கத்தில் பல இடங்களில் இணைய வசதிகள் சரியாக இல்லாத நிலையில் தான் ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. மேலும், ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பல நேரங்களில் வெயிலில் காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இது போன்ற சூழலில் புதிய தோற்றத்துடன் தற்போதுள்ள ரேஷன் கடைகளை நவீனப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 197 மையங்களில் TNUSRB SI தேர்வு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
மேலும் இந்த கடைகளில் இணையதள வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இப்போது தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் ரேஷன் கடைகள் ஒரே மாதிரியான வடிவில் இருக்கும் படி அதற்கான மாதிரியை அரசு தேர்வு செய்துள்ளது. இது குறித்த மாதிரி கட்டிடத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் தேவைப்படுகிறது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான வடிவில் புதிய பொலிவுடன் அமைக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.