ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ ஷபானா ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வெள்ளித்திரையில் என்ட்ரி!
தமிழில் செம்பருத்தி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான ஆதரவை பெற்ற ஷபானா முதன் முறையாக திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த செய்தியை ஷபானா இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஷபானா:
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் மூலமாக பார்வதியாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஷபானா. அதாவது, ஷபானா செம்பருத்தி சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பாகவே விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்பு, விஜயதசமி என்கிற மலையாள சீரியலிலும் நடித்து வந்தார். இதற்கு பிறகே தமிழில் செம்பருத்தி என்கிற சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். ஷபானா நினைத்ததை காட்டிலும் தமிழில் எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 3 கேஸ் சிலிண்டர்? மாநில அரசின் சூப்பரான அறிவிப்பு!
இதற்கு பிறகு ஷபானா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஷபானா முஸ்லீம் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர்களின் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பெற்றோர்களையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு திருமணமான சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரியப் போகிறார்கள் என வதந்திகள் பரவின. இதற்கிடையே ஆர்யனும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார். இதனால், வதந்தி மேலும் மேலும் பரவ ஆரம்பித்தது.
Exams Daily Mobile App Download
பின்பு, ஷபானா தான் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கிடையே, கூடிய விரைவில் செம்பருத்தி சீரியலும் முடிவடைய போகிறது. செம்பருத்தி சீரியலுக்கு பிறகு வேறொரு சீரியலில் அறிமுகமாவார் என எதிர்பார்த்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஒரு பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் பகையே காத்திரு என்கிற திரைப்படத்தில் தான் ஷபானா நடிக்க இருக்கிறார். ஆனால், ஷபானா எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை. மேலும், இந்த திரைப்படத்தில் ஸ்ம்ருதி வெங்கடேஷ், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் பூஜை நேற்று தான் நடைபெற்றுள்ள நிலையில் விக்ரம் பிரபுவுடன் ஷபானா இருக்கும் புகைப்படம் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.