தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் – நாளை தனியார் துறை முகாம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஏராளமான இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை நாமக்கல் மாவட்டத்தில் தனியார்துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்வதற்கான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். அத்துடன் அரசின் சார்பாகவும் எந்தவொரு வேலைவாய்ப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தப்பட்டு இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் நாளை முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாம் மாவட்டத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ முடித்தவர்கள், பட்டப்படிப்பு உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – சேட் பக்கத்தில் ஸ்டேட்டஸ் அப்டேட்! புதிய அம்சம்!
இம்முகாம் மூலமாக தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேலாளர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. அதனால் வேலையில்லா இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கேற்ப பணிகளை பெற்று கொள்ளலாம்.