இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்!
இந்தியாவில் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு யானைகள் செல்வதற்கு சுரங்கப் பாதைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாகவும் தெரிவித்தார்.
ரயில் கட்டணம்:
பொதுமக்கள் குறிப்பாக தொலைதூர பயணங்களில் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. அதனால் முக்கிய வழித்தட ரயில்கள் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. வெளி மாநிலங்களுக்கு செல்வோர் இதனால் சிரமத்திற்கு ஆளாகினர்.
Exams Daily Mobile App Download
சில மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்த போது மீண்டும் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது பயணிகளின் வசதிக்காக முன்பதிவு இல்லாத ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் முழுவதுமாக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில் கட்டணம் குறித்து அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
TNPSC துறைத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு 2022 – தேர்ச்சி பட்டியல் வெளியீடு!
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டத்தை வடிவமைத்து உள்ளனர். இதனை பார்வையிட மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார். பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் ஒரே நிலையில் உள்ளது. அதனால் சீனியர் சிட்டிசனுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டண சலுகை இனி தொடர வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ரயில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு யானைகள் செல்வதற்கு சுரங்கப் பாதைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாகவும் தெரிவித்தார்.