TNPSC துறைத்தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு 2022 – தேர்ச்சி பட்டியல் வெளியீடு!
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை TNPSC வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
துறைத் தேர்வுகள்
தமிழகத்தில் உள்ள அரசுப்பணிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தொற்று காரணமாக அரசு நடத்தும் பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டு தேர்வுகளை நடத்துவதாக அறிவித்த அரசாங்கம், குரூப் 2 மற்றும் குரூப் 4 குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. தொடர்ந்து 5000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெறு இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது பதவி உயர்வுக்காக எழுதும் துறைத் தேர்வுகள் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்று TNPSC வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா பரவலால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி வரை நடத்தப்பட்ட துறைத்தேர்வுகளில் 100க்கும் மேற்பட்ட துறைகளில் பதவி உயர்வுகளை பெற விரும்புபவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
TNPSC குரூப் 2 தேர்வெழுத உள்ளோருக்கு சூப்பர் அறிவிப்பு – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இப்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் அடங்கிய இ-புல்லட்டின் மாவட்ட வாரியாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் https://drive.google.com/file/