ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – சேவைகள் துவக்கம்!
நாட்டில் இயல்பு நிலை திரும்பி வருவதால் ரயில் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டிருந்த ரயில்களும் படிப்படியாக இயக்கப்படத் தொடங்கியது. அந்த வகையில் தற்போது தெற்கு ரயில்வேயிலும் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டுள்ளது.
ரயில்கள்:
இந்தியாவில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலைக்கு தள்ளப்பட்டனர். பெரும்பாலும் பயணம் செய்வதையே தவிர்த்து வந்தனர். இதனால் ரயில்வேத்துறை பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பயணிகளின் வருகை குறைந்த காரணத்தால் முக்கிய வழித்தட ரயில்கள், விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. நமது நாட்டில் பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இத்தகைய சூழலில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது சிரமத்தை ஏற்படுத்தியது. அதனால் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ரயில்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதிலும் பயணம் செய்ய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதாவது கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்
அதனால் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பி வருகின்றனர். அதனால் ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு அனைத்து ரயில்களும் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 324 பயணிகள் ரயில்கள் என மொத்தம் 910 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு ரயில்வேயின் 324 ரயில்கள் மற்றும் 310 பயணிகள் ரயில் இயக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்தது போல 276 ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது.