ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – முன்பதிவில்லா ரயில்கள் மீண்டும் இயக்கம்!
தமிழகத்தில் தற்போது தான் ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- திருச்சி இடையே ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் பணிகள்:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொற்று அச்சம் காரணமாக மக்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர். இவ்வாறு பயணிகள் இல்லாமல் ரயில்களை இயக்க முடியாததால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வேத்துறை பெரும் பொருளாதார சரிவையும் சந்தித்தது. குறிப்பிட்ட வழித்தட ரயில்கள் மட்டுமே சில மாதங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் முன்பதிவு அடிப்படையில் ரயில்களில் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் பயணிகள் அரசின் கொரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த முன்பதிவு முறை அவசர காரணங்களுக்காக ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு பெரும் சுமையாக இருந்து வந்தது. இத்தகைய சூழலில் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் முன்பதிவில்லா ரயில்களை இயக்கவும் விரைவு ரயில்களை இயக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து முதல் கட்டமாக 5 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி திருச்செந்தூர் – திருநெல்வேலி, மதுரை – செங்கோட்டை ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் இயங்கத் தொடங்கியது.
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!
அதன் தொடர்ச்சியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- திருச்சி இடையே பயணிகள் ரயில் சேவை இன்று (ஜூலை 9) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரக்கோணம் – கடப்பா , கோவை – சேலம், திருச்சி – கரூர், சேலம் – கரூர் ஆகிய முன்பதிவில்லாத ரயில்கள் ஜூலை 27-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. மேலும் ஜூலை 24-ம் தேதி தெற்கு ரயில்வேயில் மொத்தம் 34 முன்பதிவில்லா ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதனால் இனி அனைத்து மாவட்டங்களிலும் முன்பதிவில்லா ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்பை அடுத்து ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.