தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை பற்றி பார்ப்போம்.
ஓய்வூதியதார்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அதனால் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்ட களத்தில் இறங்கினர்.
Exams Daily Mobile App Download
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து ஆலோசனை மேற்கொண்டு விரைவில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1988 முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதார்களுக்கும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் அமலாகுமா? முதல்வர் ஸ்டாலினின் முடிவு!
மேலும் இந்த மனுவில், 2016 செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மட்டுமே ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உத்தரவு பாரபட்சமானது. அதனால் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் 7வது ஓய்வூதியகுழு பரிந்துரைத்தப்படி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தாவது, 2016க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் 7வது ஓய்வூதியகுழு அடிப்படையில் ஓய்வூதியமும் அத்துடன் நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.