தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் அமலாகுமா? முதல்வர் ஸ்டாலினின் முடிவு!
தமிழக மக்களின் நலனுக்காக, அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதேநேரம் அரசுக்காக அயராது உழைக்கும் அரசு ஊழியர்களையும் இந்த அரசு கவனத்தில் கொண்டு பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழைய பென்சன் திட்டம்:
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில் கொண்டு பழைய பென்சன் திட்டத்தை, ராஜஸ்தான் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன.
Exams Daily Mobile App Download
சில நாட்களுக்கு முன்னர்தான் கோவாவில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுவரையில் ஐந்து மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்திவிட்ட நிலையில், பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் தமிழகத்தில் ஏன் அமல்படுத்தப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் பழைய பென்சன் திட்டம் குறித்து கூறியது, ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகையை மற்ற நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதாகவும், பென்சன் போன்ற அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு போதிய நிதி இல்லை என்று கூறுவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – வேலையில்லாதோர் கவனத்திற்கு!
மேலும் எங்களைப் போன்ற அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தைச் செயல்படுத்தாமல், நீதிபதிகளுக்கு பழைய பென்சன் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். அதேபோல, எம்.எல்.ஏக்களுக்கு கூட அதிக பென்சன் பலன்கள் கிடைக்கின்றன. ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்தார். தமிழகத்தில் வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்ந்துவிட்டது. வரி வசூலும் அதிகமாக உள்ளது. எனவே வரி வசூல் மூலம், அரசின் நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தலாம். அப்படிச் செய்யாமல் அரசு ஊழியர்களுக்கான பென்சன் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர். எனவே தமிழக அரசு விரைவில் பழைய பென்சன் திட்டத்தை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.