தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய வகுப்புகள் துவக்கம்! அமைச்சர் விளக்கம்!
கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு STEM என்னும் கோடைக்கால பயிற்சி வகுப்புகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்துள்ளார். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் தனி இட ஒதுக்கீடு குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
STEM வகுப்புகள்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பலவிதமான நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற பள்ளி மாணவிகளுக்கு அவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புறங்களில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு STEM என்னும் கோடைக்கால பயிற்சி திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சார்ந்த 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றில் இருந்து வரும் ஜூன் 25 ஆம் தேதி வரை சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் STEM என்னும் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த 6 நாள் பயிற்சி வகுப்புகளை மாணவர்கள் நல்ல விதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகளில் 93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்த கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கூடிய விரைவில் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று என்று அதுகுறித்தான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.